முல்லைத்தீவு- சுதந்திரபுரத்தில் மனித எலும்பு எச்சங்கள் மீட்பு..! மனித புதைகுழியாக இருக்கலாம் என சந்தேகம்..

ஆசிரியர் - Editor I
முல்லைத்தீவு- சுதந்திரபுரத்தில் மனித எலும்பு எச்சங்கள் மீட்பு..! மனித புதைகுழியாக இருக்கலாம் என சந்தேகம்..

முல்லைத்தீவு- சுதந்திரபுரம் கொலணி பகுதியில் தோட்ட காணி ஒன்றிலிருந்து இருவ ருடையது அல்லது இருவருக்கு மேலானோருடையது என சந்தேகிக்கப்படும் மனித எலும்பு எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளது. 

நகுலேஸ்வரன் ராஜேஸ்வரி என்பவரின் தோட்டக்காணியிலேயே மனித எச்சங்கள் புதைக்கப்பட்ட நிலையில் வெளிப்பட்டுள்ளன.இன்று (ஒக்.20) ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 11.30 மணியளவில் 

காணி தோட்டத் தேவைக்காகப் பதப்படுத்திய போது, எலும்புக் கூடுகள் தென்பட்டன. இதுதொடர்பில் முல்லைத்தீவு பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது. அதனால் மனித எச்சங்கள் காணப்படும் இடத்தில் 

பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. அத்துடன், முல்லைத்தீவு நீதிவான் முன்னிலையில் நாளை நீதி – தடயவியல் விசாரணை இடம்பெறும் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு