யாழ்.நகாிலுள்ள வீடொன்றில் மீட்கப்பட்ட 15 வயது சிறுமி..! 19 வயது முஸ்லிம் இளைஞன் மற்றும் வீட்டு உாிமையாளருக்கு நடந்த கதி..

ஆசிரியர் - Editor I
யாழ்.நகாிலுள்ள வீடொன்றில் மீட்கப்பட்ட 15 வயது சிறுமி..! 19 வயது முஸ்லிம் இளைஞன் மற்றும் வீட்டு உாிமையாளருக்கு நடந்த கதி..

யாழ்.வலிகாமம் பகுதியை சோ்ந்த 15 வது சிறுமியை ஒருவரை அழைத்துவந்து குடும்பம் நடாத்தினாா். என்ற குற்றச்சாட்டில் 19 வயதான முஸ்லிம் இளைஞனுக்கும், அவருக்கு உதவிய பெண் ஒருவருக்கும் விளக்கமறியல் உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. 

19 வயது இளைஞனுக்கும் 15 வயது நிரம்பிய மாணவிக்கும் காதல் ஏற்பட்டு பெண்ணின் உறவினர் வீடொன்றில் தங்கியிருந்துள்ளனர். அதுதொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் மாணவியின் பெற்றோர் 

முறைப்பாடு வழங்கினர்.சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், மாணவியையும் இளைஞனையும் யாழ்ப்பாணம் நகரிலுள்ள வீடொன்றிலிருந்து மீட்டனர். மாணவி மருத்துவ சோதனைக்காக 

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார். இளைஞனும் அவருக்கு தங்குமிடம் வழங்கி உடந்தையாகவிருந்தார் என்ற குற்றச்சாட்டில் பெண் ஒருவரும் யாழ்ப்பாணம் பொலிஸாரால் நேற்று முன்தினம் 

வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனர். இருவரும் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் நேற்றுச் சனிக்கிழமை முற்படுத்தப்பட்டனர். அவர்கள் இருவரையும் வரும் 31ஆம் திகதிவரை விளக்கமறியலில் 

வைக்க யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் ஏ.பீற்றர் போல் உத்தரவிட்டார்.அத்துடன், வரும் 31ஆம் திகதிக்கு முன்னர் இளைஞனையும் பெண்ணையும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் மருத்துவ சோதனைக்கு உத்தரவிட்ட நீதிமன்று, 

பெண்ணின் கைக்குழந்தையை சிறைச்சாலையில் தாயார் வைத்திருக்கவும் அனுமதியளித்தது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு