கடுமையான பனி மூட்டம் இருளில் மூழ்கிய வவுனியா..!

ஆசிரியர் - Editor I
கடுமையான பனி மூட்டம் இருளில் மூழ்கிய வவுனியா..!

இன்று காலை அதிகளவான பனிமூட்டத்தினால் வவுனியா மாவட்டம் இருளில் மூழ்கி ய நிலையில், சாரதிகள், மக்கள் பெரும் அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்துள்ளனர்.

வவுனியா நகரம் உட்பட அனைத்து இடங்களிலும் காலை 8 மணி வரை அதிகளவான பனிமூட்டம் காணப்பட்டது. இதன் காரணமாக வேலைக்கு செல்வோர், வாகனச் சாரதிகள் எனப்பலரும் சிரமங்களை எதிர்கொண்டிருந்தனர்.

ஏ9 வீதி உட்பட வவுனியாவில் வீதியால் சென்ற வாகனங்கள் காலை 8 மணி வரை வாகன விளக்குகளை ஒளிரச் செய்தபடி பயணித்தனர். அண்மைக்காலமாக குளிருடன் கூடிய காலநிலை வவனியாவில் காணப்பட்ட போதிலும் 

இன்று கடுமையான பனிமூட்டம் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு