பயங்கரவாதி சஹரான் ஹாசீமுடன் அமைச்சா் ஹக்கீமுக்கு தொடா்பா..? ஹக்கீமை கைது செய்யுமாறு முறைப்பாடு..

ஆசிரியர் - Editor I
பயங்கரவாதி சஹரான் ஹாசீமுடன் அமைச்சா் ஹக்கீமுக்கு தொடா்பா..? ஹக்கீமை கைது செய்யுமாறு முறைப்பாடு..

உயிா்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதல்களின் சூத்திரதாாி என கூறப்படும் சஹாரான் ஹாசீமு டன் அமைச்சா் ஹக்கீம் தொடா்புகளை வேணியதாக காணொளி ஒன்று வெளியான நிலையில் ஹம்கீமை கைது செய்யுமாறு பொலிஸ் தலமையகத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சமூக வலைதளங்களில் பகிரப்படும், அமைச்சர் ரவூப் ஹக்கீம் மற்றும் ஈஸ்டர் தாக்குதலின் பிரதான சூத்திரதாரி சஹ்ரான் ஹாஸீமுக்கு இடையில் இடம்பெற்றதாக கூறப்படும் சந்திப்பு தொடர்பான தகவல்களை முன்வைத்து இந்த முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாட்டை பதிவு செய்ததன் பின்னர், ஊடகங்களிடம் கருத்து தெரிவித்துள்ள மிஃப்லான் மௌலவி, முக்கியமானவர்கள் வெளியே உள்ள நிலையில், ஏனையவர்கள் உள்ளே இருக்கின்றனர். இந்த நிலையில், ரவூப் ஹக்கீமை கைதுசெய்து 

சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர்.அத்துடன், ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ளும் தெரிவுக்குழுவிலிருந்து ரவூப் ஹக்கீமை நீக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, குறித்த முறைப்பாட்டை பதிவுசெய்து வீடு திரும்பிய சந்தர்ப்பத்தில், மாளிகாவத்தையில் உள்ள தனது வீட்டில் பொலிஸார் சோதனை மேற்கொண்டதாக மிஃப்லான் மௌலவி தெரிவித்துள்ளார். வீட்டில் சில கையேடுகள் இருப்பதாக கிடைத்த தகவலுக்கு 

அமைய இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும் எனினும், எவ்வித நீதிமன்ற அனுமதியும் அதற்காக பெற்றுக்கொண்டிருக்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு