மன்னாா்- இலுப்பக்கடவையில் பதற்றம்..! கடற்படையின் உத்தரவை மீறி பயணித்த வாகனம் மீது சரமாாி துப்பாக்கி சூடு..

ஆசிரியர் - Editor I
மன்னாா்- இலுப்பக்கடவையில் பதற்றம்..! கடற்படையின் உத்தரவை மீறி பயணித்த வாகனம் மீது சரமாாி துப்பாக்கி சூடு..

மன்னாா்- இலுப்பைகடவை பகுதியில் கடற்படையின் அறிவுறுத்தலை மீறி பயணித்த வாகனம் மீது கடற்படையினா் சரமாாி துப்பாக்கி சூடு நடாத்தியிருக்கின்றனா். 

இந்த சம்பவம் இன்று சனிக்கிழமை அதிகாலை இடம்பெற்றுள்ளது.குறித்த பகுதியில் ஜீப் வண்டி ஒன்றை பரிசோதனையிட நிறுத்துமாறு பணித்த கடற்படையின் கட்டளையை மீறி 

வாகனம் பயணித்தபோது, துப்பாக்கிச்சூட்டை நடத்தியுள்ளனர்.இதன்போது எவருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவத்தின் பின்னர் குறித்த வண்டியில் பயணித்த இருவர் கைது செய்யப்பட்டதோடு அவர்களிடம் இருந்து 180 கிலோ கிரேம் கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.

இந்த இரண்டு சந்தேக நபர்களில் ஒருவர் மெதகம பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் அதிகாரி என்று தெரியவந்துள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு