50 அடி பள்ளத்தில் பாய்ந்த முச்சக்கர வண்டி..! 3 போ் படுகாயம்..

ஆசிரியர் - Editor I
50 அடி பள்ளத்தில் பாய்ந்த முச்சக்கர வண்டி..! 3 போ் படுகாயம்..

ஹட்டன்- நுவரெலியா பிரதான வீதியில் இன்று மதியம் 50 அடி பள்ளத்தில் பாய்ந்து முச்சக்கர வ ண்டி ஒன்று விபத்துக்குள்ளானதில் 3 போ் படுகாயமடைந்துள்ளனா். 

குடா ஓயா பகுதியிலிருந்து ஹட்டன் நகரப் பகுதியை நோக்கிச் சென்றுக் கொண்டிருந்த போதே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

முச்சக்கரவண்டியில் ஏற்பட்ட இயந்திர கோளாறு காரணமாகவே குறித்த விபத்து ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர். 

குறித்த விபத்து தொடர்பாக மேலதிக விசாரணைகளை ஹட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு