பொது உடன்பாட்டுக்கு வந்திருக்கும் 5 தமிழ் கட்சிகளுக்கும் கோட்டா ஜனாதிபதியானவுடன் புனா்வாழ்வு..! இனவாதம் கக்கும் பிக்குகள்..

ஆசிரியர் - Editor I
பொது உடன்பாட்டுக்கு வந்திருக்கும் 5 தமிழ் கட்சிகளுக்கும் கோட்டா ஜனாதிபதியானவுடன் புனா்வாழ்வு..! இனவாதம் கக்கும் பிக்குகள்..

ஜனாதிபதி தோ்தலில் பேரம் பேசுவதற்காக 5 தமிழ் கட்சிகள் இணைந்து உருவாக்கியிருக்கும் பொது நிலைப் பாட்டிற்கு பௌத்த அமைப்புக்கள் கடுமையான எதிா்ப்பை வெளியிட்டிருப்பதுடன், கோட்டா ஜனாதிபதியா னால் 5 தமிழ் கட்சிகளுக்கும் புனா்வாழ்வு வழங்கவேண்டும். என கூறியுள்ளனா். 

இவ்­வி­டயம் தொடர்பில் ஓமல்பே சோபித தேரர் குறிப்­பி­டு­கையில், மகா­வலி குடி­யேற்ற திட்டம் நீக்­கப்­பட வேண்டும் என்றும் ஒரு­மைப்­பாடு அல்­லது ஒற்­றை­யாட்சி முழு­மை­யாக நீக்­கப்­பட வேண்டும் என்றும் 13 கோரிக்­கை­களை தமிழ் கட்­சிகள் முன்­வைத்­துள்­ளன. 

இந்த கோரிக்­கை­களை எந்த கட்சி ஏற்றுக் கொள்­கின்­றது என்­பதை நாமும் ஆர்­வத்­துடன் எதிர்­பார்த்­தி­ருக்­ கின்றோம். எந்­த­வொரு வேட்­பா­ள­ருக்கும் இவற்றை கையி­லெ­டுத்து வாசிப்­ப­தற்கு கூட உரிமை கிடை­யாது என்று குறிப்­பிட்டார். எல்லே குண­வங்ச தேரர் குறிப்­பி­டு­கையில்,

ஜனா­தி­பதித் தேர்­தலை முன்­னிட்டு 5 தமிழ் கட்­சிகள் முன்­வைத்­துள்ள கோரிக்­கை­களில் ஒற்­றை­யாட்சி நீக்­கப்­ பட வேண்டும் என்ற கோரிக்­கையை ஒரு­போதும் ஏற்றுக் கொள்ள முடி­யாது. குறிப்­பாக வடக்கு மற்றும் கிழக்கை சுய­நிர்­ணய எல்­லை­யாகக் கோரு­கின்­றனர். 

இவர்கள் முழு இலங்­கை­யையும் சுய­நிர்­ணய எல்­லை­யாகக் கோரி­னாலும் அதை நாம் ஏற்றுக் கொள்வோம். ஆனால் வடக்கை மாத்­திரம் கோரு­வதை ஏற்க முடி­யாது.மீண்டும் அடிப்­ப­டை­வா­தி­களை உரு­வாக்­கு­வ­தற்­கான முயற்­சி­களே தற்­போது மேற்­கொள்­ளப்­ப­டு­கின்­றன. 

ஒரு­புறம் முஸ்லிம் அடிப்­ப­டை­வா­தி­க­களும் மறு­புறம் தமிழ் அடிப்­ப­டை­வா­தி­களும் செயற்­பட்டுக் கொண்­டி­ருக்­ கின்­றனர். உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தலில் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு இது வரையில் தீர்வு வழங்­கப்­ப­ட­வில்லை என்று பேராயர் கர்­தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்­டகை என்னை சந்­தி­தத்த போது கூறினார். 

தாக்­கு­தல்­க­ளுடன் தொடர்­பு­டைய குற்­ற­வா­ளி­களை இன்­னமும் இந்த அர­சாங்­கத்தால் கண்டு பிடிக்க முடி­யா­ துள்­ளது. இந்­நி­லையில் இந்த அர­சாங்கம் ஆட்­சியில் இருந்தும் என்ன பயன்? எனவே இம்­முறை மக்கள் தமது வாக்­கு­களை முறை­யாக பயன்­ப­டுத்த வேண்டும் என்றார். 

 மாகல்­கந்தே தேரர் குறிப்­பி­டு­கையில்,தமிழ் அர­சி­யல்­வா­தி­களின் இந்த அடிப்­ப­டை­வாத கோரிக்­கை­களை ஏற்றுக் கொள்ள முடி­யாது. விடு­தலைப் புலிகள் இயக்­கத்தின் தலைவர் பிர­பா­க­ரனை தோல்­வி­யடைச் செய்த போதிலும் தமிழ் அரசியல்வாதிகளுக்கு புனர்வாழ்வளிக்க முடியாமல் போயுள்ளது. 

விடுதலைப்புலிகளின் கொள்கைகளை மீண்டும் கொண்டு வர முயற்சிக்கும்  தமிழ் அரசியல்வாதிகளுக்கு கோத்தாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாதன் பின்னர் புனர்வாழ்வளிக்குமாறு கோருகின்றேன் என்றார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு