தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் சாவகச்சோி நகரசபை உறுப்பினா் கோட்டா பக்கம் தாவினாா்..!

ஆசிரியர் - Editor I
தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் சாவகச்சோி நகரசபை உறுப்பினா் கோட்டா பக்கம் தாவினாா்..!

தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் சாவகச்சோி நகரசபை உறுப்பினா் ப.ஜெயக்கா ந்தன் பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளா் கோட்டபாய ராஜபக்ஸ வுக்கு ஆதரவு வழங்கி பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளாா். 

இன்று காலை அவரது நகர வட்டாரத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாயா ராஜபக்சவிற்கு பரப்புரை மேற்கொள்வது தொடர்பாக இடம்பெற்ற பொக்கெட் கலந்துரையாடலில் 

யாழ்ப்பாணம் மாவட்ட முன்னாள் கட்டளைத் தளபதியும் வடக்கு மாகாண முன்னாள் ஆளுநருமான ஜீ.ஏ.சந்திரசிறியுடன் இணைந்து கலந்துகொண்டார்.இதன்போது சாவகச்சேரி நகரசபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 

நகரசபை உறுப்பினர் ப.ஜெயக்காந்தன் தலைமையில் கோத்தபாய ரஜபக்சவிற்கு பரப்புரைப் பணிகளை முன்னெடுப்பது என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதித் தேர்தலை தமிழ்தேசிய மக்கள் முன்னணி 

 புறக்கணிக்க முடிவெடுத்துள்ள நிலையில் அக்கட்சியின் நகரசபை உறுப்பினர் முன்னாள் யாழ்.மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியுடன் இணைந்து கோத்தபாய ராஜபக்சவிற்கு ஆதரவு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு