பாதசாாி கடவை ஊடாக வீதியை கடந்தவரை மோதி துாக்கி எறிந்த வாகனம்..! 70 வயது முதியவா் உயிாிழப்பு..

ஆசிரியர் - Editor I
பாதசாாி கடவை ஊடாக வீதியை கடந்தவரை மோதி துாக்கி எறிந்த வாகனம்..! 70 வயது முதியவா் உயிாிழப்பு..

மன்னாா்- புத்தளம் வீதியில் இடம்பெற்ற விபத்தில் 70 வயதான முதியவா் ஒருவா் சம்ப வ இடத்திலேயே உயிாிழந்திருக்கின்றாா். 

ஸ்ரீ சித்திவிநாயகர் கோயிலிற்கு முன்பாக உள்ள மஞ்சள் கடவையில் சென்ற ஒருவரை புத்தளத்தில் இருந்து வண்ணாத்திவில்லு பகுதிக்கு சென்ற வேன் ஒன்றில் 

மோதூண்டு விபத்துக்குள்ளானதில் குறித்த ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார். 70 வயதுடைய நடராஜா தர்மலிங்கம் என்பவரே இவ்விபத்தில் உயிரிழந்துள்ளார். 

இவர் புத்தளம் ஸ்ரீ சித்திவிநாயகர் கோயிலில் 20 வருடங்களாக கணக்குப்பிள்ளையாக கடைமையாற்றி வந்துள்ளார். 

 இந்நிலையில் குறித்த விபத்து நேற்று இரவு 8.30 மணியில் கோயிலை மூடிவிட்டு சென்ற வேளையிலேயே இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

உயிரிழந்தவரின் சடலம் புத்தளம் ஆதார வைத்தியசாலையின் பிரேத அரையில் வைக்கப்பட்டுள்ள நிலையில். 

வேனின் சாரதி பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.இதையடுத்து குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை 

புத்தளம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு