கிளிநொச்சியில் ஆயுதங்கள் மீட்பு..! சிங்கள மக்களுக்கு புலி பூச்சாண்டி காட்ட மஹிந்த ஆடும் நாடகம்..

ஆசிரியர் - Editor I
கிளிநொச்சியில் ஆயுதங்கள் மீட்பு..! சிங்கள மக்களுக்கு புலி பூச்சாண்டி காட்ட மஹிந்த ஆடும் நாடகம்..

மஹிந்தாவும் அவருடைய சகாக்களும் தோ்தல் காலத்தில் சிங்கள மக்களுக்கு புலி பூச் சாண்டி காட்டுவதற்காக செய்யப்பட்ட நாடகமே கிளிநொச்சியில் ஆயுதங்கள் மீட்கப் பட்டிருக்கும் சம்பவம் என சிங்கள ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன. 

ரி-56 ரக துப்பாக்கியொன்றுடன் விடுதலைப் புலி உறுப்பினர் ஒருவர் சேருநுவர பிரதேசத்தில் வைத்து பொலிஸாரினால் கைது செய்யப்பட்டதாக அறிவிக்கப்ப ட்டுள்ளது. சேருநுவர இராணுவ முகாமின் அதிகாரி ஒருவருக்கு 

கிடைக்கப்பெற்ற தகவல்களுக்கு அமைய குறித்த சந்தேக நபரை கைது செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. சந்தேக நபர் தங்கியிருந்த வீட்டிலிருந்து கைத்துப்பாக்கிகள், தோட்டாக்கள், குண்டுகள், செல்லிடப்பேசிகள், 

பிரபாகரனின் உருவம் பொறிக்கப்பட்ட ரீசேர்ட்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. இதன்படி குறித்த வீட்டியில் தங்கியிருந்த சந்தேக நபரின் மனைவி, சகோதரி ஆகியோரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

ராஜபக்சக்கள் தேர்தலில் போட்டியிடும் போது சிங்கள சமூகத்தை அச்சுறுத்தும் நோக்கில் இவ்வாறு புலிப்பீதியை ஏற்படுத்துவதாக சிங்கள ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.

சிங்கள வாக்குகளைக் கொண்டு வெற்றியீட்ட எத்தனிக்கும் மஹிந்த தரப்பு புலிகள் மீள எழுவதாகத் தெரிவித்து பிரச்சாரங்களை முடுக்கி விட்டுள்ளதாக ஊடகம் விமர்சனம் வெளியிட்டுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு