புலம்பெயா் தமிழா்கள், தாய தமிழா்களின் 2 கோடி ரூபாய் நிதி உதவியில் CT Scan இன்று சேவை ஆரம்பிக்கப்பட்டது..!

ஆசிரியர் - Editor I
புலம்பெயா் தமிழா்கள், தாய தமிழா்களின் 2 கோடி ரூபாய் நிதி உதவியில் CT Scan இன்று சேவை ஆரம்பிக்கப்பட்டது..!

புலம்பெயா் தமிழா்கள் மற்றும் தாய தமிழா்களின் 2 கோடி ரூபாய் நிதி பங்களிப்பில் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு புதிதாக கொள்வனவு செய்யப்பட்ட CT Scan இயந்திரம் இன்று 12.10.2019 வைபவ ரீதியாக சேவைகளை தொடங்கியுள்ளது. 

இவ்இயந்திரம் கொள்வனவு செய்வதற்காக இரண்டு கோடி ரூபா அன்பளிப்பு செய்த அறக்கொடைச் செம்மல் திரு. சுப்பிரமணியம் கதிர்காமநாதன் நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

இவருடன் இந்த இயந்திரத்தினை வாங்குவதற்கு பொ.றஞ்சன், பி.நந்தபாலன் மற்றும் சமூக ஆர்வலர்களின் நிதிப் பங்களிப்பு மூலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு நவீன சி.ரி.ஸ்கானர் வழங்கப்பட்டுள்ளது.

நிகழ்வில் யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தலைமையில் காலை 8.30 இற்கு இந் நிகழ்வு இடம்பெற்றது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு