யாழ்ப்பாணம்- சா்வதேச விமான நிலையத்திற்கு சென்னையிலிருந்து வாரத்திற்கு 7 விமான சேவை..! இந்திய அரசு ஒப்புதல்.

ஆசிரியர் - Editor I
யாழ்ப்பாணம்- சா்வதேச விமான நிலையத்திற்கு சென்னையிலிருந்து வாரத்திற்கு 7 விமான சேவை..! இந்திய அரசு ஒப்புதல்.

யாழ்ப்பாணம்- சா்வதேச விமான நிலையத்திற்கு தமிழகம் சென்னையிலிருந்து வாரத்திற்கு 7 விமான சேவைகள் நடாத்த அலையன்ஸ் எயா் நிறுவனத்திற்கு இந்திய மத்திய அரசு ஒப்புதல் வழங்கியிருக்கின்றது. 

பலாலி விமான நிலையம் அபிவிருத்தி செய்யப்பட்டு, யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையமாக பெயரிடப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா வரும் 17ஆம் திகதி நடக்கவுள்ளது. இந்த நிலையிலேயே, 

சென்னை விமான நிலையத்தில் இருந்து யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பு விமான நிலையங்களுக்கு வாரத்தில் 7 விமான சேவைகளை நடத்துவதற்கு, இந்திய அரசு, அலையன்ஸ் எயர் நிறுவனத்துக்கு அனுமதி அளித்துள்ளது. 

அலையன்ஸ் எயர் நிறுவனம் வெளிநாட்டுக்கான (இலங்கை) சேவைகளை நடத்துவதற்கு, இந்தியாவின் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சு, அனுமதி அளித்துள்ளதாக  (IANS) செய்தி வெளியிட்டுள்ளது. 

பலாலி மற்றும் மட்டக்களப்புக்கான விமான சேவைகளுக்கு அலையன்ஸ் எயர் நிறுவனம், ATR 72-600 விமானங்களைப் பயன்படுத்தவுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு