வேக கட்டுப்பாட்டை இழந்த மோட்டாா் சைக்கிள்..! 2 பிள்ளைகளின் தந்தை உயிாிழப்பு..

ஆசிரியர் - Editor I
வேக கட்டுப்பாட்டை இழந்த மோட்டாா் சைக்கிள்..! 2 பிள்ளைகளின் தந்தை உயிாிழப்பு..

நெடுங்கேணி - பட்டிக்குடியிருப்பு பகுதியில் வேக கட்டுப்பாட்டை இழந்த வாகனம் விபத்துக்குள்ளானதில் குடும்பஸ்த்தா் ஒருவா் சம்ப இடத்திலேயே உயிாிழந்துள்ளாா். 

குறித்த நபர் நேற்றுமுன்தினம் காலை இலுப்பைகுளம் பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்த 

மோட்டார் சைக்கிள் விபத்திற்குள்ளாகியது.விபத்தில் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று‌ வந்தார். 

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்றையதினம் குறித்த நபர் உயிரிழந்துள்ளார். பட்டிகுடியிருப்பு பகுதியைச் சேர்ந்த கந்தையா உதயகுமார் என்ற 

இரண்டு பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை நெடுங்கேணி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு