காணாமல்போன 3 மீனவா்களில் 2 மீனவா்கள் உயிருடன் மீட்பு..! ஒருவா் உயிாிழந்த நிலையில் கடலில் துாக்கி வீசப்பட்டாராம்..

ஆசிரியர் - Editor I
காணாமல்போன 3 மீனவா்களில் 2 மீனவா்கள் உயிருடன் மீட்பு..! ஒருவா் உயிாிழந்த நிலையில் கடலில் துாக்கி வீசப்பட்டாராம்..

சாய்ந்தமருது- மாளிகைக்காடு பகுதியிலிருந்து ஆழ்கடல் மீன்பிடிக்கு சென்று காணா மல்போன நிலையில் இந்திய பெருங்கடல் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள 3 மீன வா்களில் 2 மீனவா்கள் உயிருடன் மீட்கப்பட்டிருக்கின்றனா். 

மீட்கப்பட்ட குறித்த இருவரும் நேற்றிரவு திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சாய்ந்தமருது ஹிஜ்ரா வீதியை சேர்ந்த 

இஸ்மாலெப்பை முஹம்மட் ஹாரிஸ் (37 வயது) மற்றும் சாய்ந்தமருது, முந்திரியடி பகுதியை சேர்ந்த சீனி முஹம்மது ஜூனைதீன் (36 வயது) ஆகிய இருவருமே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை காரைதீவு - மங்கிளிப்பு சப்பு வீதியைச் சேர்ந்த சண்முகம் ஸ்ரீ கிருஷ்ணன் (47 வயது) என்பவரே உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,

கடந்த மாதம் 18ஆம் திகதி பிற்பகல் அளவில் சாய்ந்தமருது - மாளிகைக்காடு எனும் பகுதியில் இருந்து ஆழ்கடலுக்கு மீன் பிடிப்பதற்காக சென்ற படகில் இயந்திர கோளாறு ஏற்பட்டுள்ளது.இந்த நிலையில் மூன்று மீனவர்களும் 

கடலில் தத்தளித்துக் கொண்டிருந்துள்ளனர். கடந்த 28ஆம் திகதி இவர்களுடன் சென்ற ஒருவர் கடலில் வைத்து உயிரிழந்த நிலையில் அவருடைய சடலத்தை மற்றைய இருவரும் படகில் வைத்திருந்துள்ளனர்.

இதனையடுத்து சடலம் துர்நாற்றம் வீசியதன் காரணமாக இம்மாதம் ஏழாம் திகதி சடலத்தை கடலில் வீசியுள்ளதாக தெரியவருகிறது.மேலும் சம்பவம் தொடர்பான தீவிர விசாரணைகளை தாம் மேற்கொண்டு வருவதாக 

துறைமுக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு