புதுக்குடியிருப்பில் பாாிய தேடுதல்..! முடிவில் வழக்கம்போல் ஏமாற்றமாம்..

ஆசிரியர் - Editor I
புதுக்குடியிருப்பில் பாாிய தேடுதல்..! முடிவில் வழக்கம்போல் ஏமாற்றமாம்..

தமிழீழ விடுதலை புலிகளினால் இறுதிப்போா் காலத்தில் தங்கம் புதைக்கப்பட்டதாக கூறி புதுக்குடியிருப்பு பகுதியில் உள்ள பழைய இரும்பு விற்பனை நிலையத்தில் தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. 

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையம் முன்பாகவுள்ள பழைய இரும்பு பொருட்கள் விற்பனை செய்யும் நிலையத்தில் முன்னெடுக்கப்பட்டது.

முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றின் அனுமதியுடன் பொலிஸார் ,விசேட அதிரடிப்படையினர் ,இராணுவம் இணைந்து இந்த அகழ்வு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போதிலும் 

எந்தவிதமான பொருட்களும் கிடைக்கப்பெறவில்லை . கடந்தவாரமும் இதே பகுதியில் இரண்டு தடவை அகழவு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு தோல்வியில் நிறைவடைத்திருந்தது . 

இந்த நிலையில் மீண்டும் இன்றையதினம் அகழ்வு மேற்கொண்ட போதிலும் எந்தவிதமான பொருட்களும் கிடைக்கவில்லை .என்பது குறிப்பிடத்தக்கது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு