வாக்கு பெட்டிகள் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி..!

ஆசிரியர் - Editor I
வாக்கு பெட்டிகள் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி..!

ஜனாதிபதி தோ்தலுக்கு வாக்கு பெட்டிகள் வெளிநாட்டிலிருந்து இறக்கும தி செய்யப்படவுள்ளதாக தோ்தல் ஆணைக்குழுவின் தலைவா் மஹிந்த தேசப்பிாிய கூறியிருக்கின்றாா். 

ஜனாதிபதித் தேர்தலுக்காக இம்முறை தயாரிக்கப்படவுள்ள வாக்குச் சீட்டானது வரலாற்றில் மிகவும் நீளமான வாக்குச் சீட்டாகும் எனவும் அவர் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது,

தேர்தல் விதிமுறைகளை மீறும் சம்பவம் தொடர்பில் முறையிடுவதற்கு 0112 868 212 அல்லது 0112 868 214 ஆகிய தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. 

 எட்டாவது ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக நேற்றைய தினம் 35 வேட்பாளர்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்திருந்தனர். ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக 

கட்டுப்பணம் செலுத்தியிருந்த ஷமல் ராஜபக்ஷ, குமார வெல்கம உள்ளிட்ட ஆறு பேர் நேற்றைய தினம் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. 

தாக்கல் செய்யப்பட்ட 2 வேட்புமனுக்களுக்கெதிராக முன்வைக்கப்பட்ட ஆட்சேபனை நிராகரிக்கப்பட்டுள்ளது. தேர்தல் விதிகளுக்கமைவாக இந்த வேட்பு மனுதாக்கல் இடம்பெற்றிருந்தமையால் 

இவற்றுக்கு எதிரான ஆட்சேபனை ஏற்றுக்கொள்ளப்படவில்லை – என்றார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு