கொக்குதொடுவாய் விபத்தில் பாடசாலை மாணவன் உயிாிழப்பு..! சிங்கள சாரதியை காப்பாற்ற பொலிஸாா் முயற்சி..

ஆசிரியர் - Editor I
கொக்குதொடுவாய் விபத்தில் பாடசாலை மாணவன் உயிாிழப்பு..! சிங்கள சாரதியை காப்பாற்ற பொலிஸாா் முயற்சி..

முல்லைத்தீவு- கொக்குதொடுவாய் பாடசாலைக்கு முன்பாக இன்று காலை விபத்து ஒன்று இடம் பெற்றுள்ளது. இந்த விபத்தில் பாடசாலை மாணவன் ஒருவன் உயிாிழந்துள்ளான். 

இதேவேளை விபத்தை ஏற்படுத்திய சிங்கள சாரதியை காப்பாற்றும் முயற்சியில் பொலிஸாா் ஈடுபட்டதாக மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனா்.

2ம் இணைப்பு.. 

பாடசாலைக்கு முன்பாக வீதியில் சைக்கிளில் சென்ற மாணவர்களை கொக்குளாயிலிருந்து முல்லைத்தீவு நோக்கி வந்த கப் ரக வாகனம் மோதி தள்ளியதில் சம்பவ இடத்திலேயே ஒரு மாணவன் பலியாகினான். 

மேலும் ஒரு மாணவன் படுகாயமடைந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளான். செல்வரத்தினம் கேதீஸ் (வயது11) என்ற மாணவனே பலியாகியுள்ளான்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு