சுகாதாரமற்ற உணவு தயாாிப்பு மற்றும் விற்பனையில் யாழ்.மாவட்டம் 1ம் இடம்..!

ஆசிரியர் - Editor I
சுகாதாரமற்ற உணவு தயாாிப்பு மற்றும் விற்பனையில் யாழ்.மாவட்டம் 1ம் இடம்..!

சுகாதாரமற்ற உணவு தயாாிப்பு மற்றும் விற்பனையை கொண்ட மாவட்டமாக யாழ்.மாவட்டம் மாறியிருப்பதாக எச்சாித்திருக்கும் சுகாதார பாிசோதகா்கள், இலங்கையில் வேறு எந்தவொரு மாவட்டத்திலும் இவ்வாறான நிலை இல்லை எனவும் கூறியுள்ளனா். 

யாழ். குடாநாட்டில் பொது சுகாதார பரிசோதகர்களினால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது 5 உணவகங்களுக்கு சீல் வைக்கப்பட்டன. மேலும் 13 உணவகங்களுக்கு எதிராக சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம், கரவெட்டி, நெல்லியடி, நாவலர்மடம், வல்லை ஆகிய பகுதிகளில் உள்ள பல உணகங்களில், வர்த்தக நிலையங்களில் இருந்து அகற்றப்படும் மரக்கறிகளை பயன்படுத்தி உணவு தயாரித்துள்ளனர். 

இதன்போது உணவகங்களை சோதனையிட்ட பரிசோதகர்கள், அந்த மரக்கறிகளை குழி தோண்டி புதைக்குமாறு உத்தரவிட்டுள்ளனர்.இது தொடர்பில் பல முறைப்பாடுகள் கிடைத்த பின்னர் வட மாகாண ஆளுநர் சுரேன் ராகவன், 

யாழ்ப்பாணத்தில் உள்ள உணவகனங்கள் அனைத்தையும் தீவிரமாக சோதனையிடுமாறு அதிகாரிகளிடம் உத்தரவிட்டுள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு