கடற்கரையில் காற்றுவாங்கபோன வயோதிபாின் தலையில் தென்னை மர குற்றியை போட்டு கொலை..! நிந்தவூாில் கொரூரம்..

ஆசிரியர் - Editor I
கடற்கரையில் காற்றுவாங்கபோன வயோதிபாின் தலையில் தென்னை மர குற்றியை போட்டு கொலை..! நிந்தவூாில் கொரூரம்..

நிந்தவூா்- மீராநகா் கடற்கரையில் காற்று வாங்க சென்ற வயோதிபாின் தலையில் தென்னை மர குற்றியை துாக்கி போட்டு கொலை செய்த நபரை பொலிஸாா் கைது செய்துள்ளனா்.

இந்த சம்பவம் நேற்று இரவு 8.30 மணியளவில் இடம்பெற்றிருக்கின்றது. குறித்த சம்பவத்தில்  முகம்மது தம்பி மீராநுாா் மீராலெப்பை என்ற 73 வயதான முதியவா் உயிாிழந்துள்ளாா்.  

குறித்த நபர் மீது தென்னை மரக்குற்றி மூலம் தலையில் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு படுகாயமடைந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

மேலும் குறித்த நபரை தாக்கியதாக சந்தேகத்தின் பெயரில் அதே பகுதியை சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் சம்பவத்துடன் தொடர்புடைய மற்றுமொருவர் 

தலைமறைவாகி உள்ளதாக சம்மாந்துறை பொலிஸார் தெரிவித்தனர். குறித்த சடலத்தை சம்மாந்துறை நீதிமன்ற நீதிவான் பார்வையிட்டுள்ளதோடு 

அம்பாறை தடயவியல் பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று பரிசோதனைகளை மேற்கொண்டனர். இக்கொலைச் சம்பவம் தொடர்பாக 

மேலதிக விசாரணைகளை அம்பாறை பிராந்திய பொலிஸ் அத்தியட்சகர் எச்.ஏ மாரப்பனவின் நேரடி கண்காணிப்பின் கீழ் உதவி பொலிஸ் அத்தியட்சகர் எல்.சூரிய பண்டார 

 தலைமையில் சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம்.கே இப்னு அசார் குற்றத் தரடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் றமீஸ் 

 ஆகியோர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு