11 வயது சிறுமியை பற்றைக்குள் இழுத்து சென்றவா் அடித்து நொருக்கப்பட்டாா்..! கிளிநொச்சி- கண்டாவளையில் சம்பவம்..

ஆசிரியர் - Editor I
11 வயது சிறுமியை பற்றைக்குள் இழுத்து சென்றவா் அடித்து நொருக்கப்பட்டாா்..! கிளிநொச்சி- கண்டாவளையில் சம்பவம்..

கண்டாவளை- பொியகுளம் பகுதியில் 11 வயது சிறுமியை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்க முயற்சித்த இருவாில் ஒருவரை சிறுமியின் சகோதரன் மடக்கி பிடித்து நையப்புடைத்த பின்னா் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளான். 

கடந்த சனிக்கிழமை மாலை ஏழு மணியளவில் தனியார் கல்வி நிலையத்திற்குச் சென்றுவிட்டு பேரூந்தில் சென்ற சிறுமி கண்டாவளை பிரதேச செயலகம் அருகில் இறங்கி வீடு செல்வதற்கு நடந்த சென்ற போது வீதியில் இருபுறமும் உள்ள பற்றைக்குள் 

மறைந்திருந்த பெரியகுளத்தைச் சேர்ந்த ஒருவர் குறித்த சிறுமியை வாயை பொத்திப் பிடித்தப்படி பற்றைக்குள் இழுத்துச் சென்றுள்ளார். அவருடன் பிரிதொரு நபரும் சென்றுள்ளார். இதன் போது குறித்து சிறுமி கதறி கூக்குரல் எழுப்பியதுடன்,

இழுத்துச் சென்றவரின் கையை கடித்து விட்டு வீதிக்கு தப்பியோடியுள்ளார். இதன் போது குறித்த சிறுமியின் சகோதரனும் அவ் வீதியால் பயணித்துள்ளார். இதனையடுத்து சிறுமியின் சகோதரன் அவர்களை தாக்குதவதற்கு விரைந்த போது 

ஒருவன் தப்பிச் சென்ற நிலையில் ஒருவரை தாக்கியுள்ளார். பின்னர் கிளிநொச்சி பொலீஸ் சிறுவர் பெண்கள் பிரிவில் முறைப்பாடு செய்யப்பட்டதோடு சிறுமி வைத்தியசாலை அனுமதிக்கப்பட்டுள்ளார். 

இந்த நிலையில் பொலிஸார் இன்றைய தினம் குறித்த நபர் உட்பட இருவரையும் கைது செய்துள்ளனர் இருவரையும் நாளைய தினம் (செவ்வாய்கிழமை) கிளிநொச்சி நீதவான் நீதி மன்றில் முற்படுத்தவுள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு