யாழ்ப்பாணம் சா்வதேச விமான நிலையத்தின் சேவைகள் ஆரம்பமாவதில் தாமதம்..! கட்டுநாயக்க விமானநிலைய அதிகாாிகள் காரணமாம்.

ஆசிரியர் - Editor I
யாழ்ப்பாணம் சா்வதேச விமான நிலையத்தின் சேவைகள் ஆரம்பமாவதில் தாமதம்..! கட்டுநாயக்க விமானநிலைய அதிகாாிகள் காரணமாம்.

யாழ்ப்பாணம் சா்வதேச விமான நிலையத்திலிருந்து தமிழகத்தின் சென்னை விமான நிலையத் திற்கே 1வது விமான சேவை நடைபெறும். என தற்போது செய்திகள் வெளியாகியுள்ளது. 

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையமானது தரம் உயா்த்தப்பட்டமைக்கான சான்றிதழ் இதுவரை இந்திய சிவில் விமான கட்டுப்பாட்டு அதிகார சபைக்கு கையளிக்கப்படவில்லை.

இதனால் இந்தியன் எயார் லைன்ஸ் தனது அதிகார பூர்வ பறப்பு விமான நிலையங்களின் பட்டியலில் யாழ்ப்பாணம் விமான நிலையத்தின் பெயர் இணைக்கப்படவில்லை. 

குறித்த சான்றிதழ் எதிர் வரும் 10ஆம் திகதி யாழ்ப்பாணம் விமான நிலையத்தின் முதல் கட்ட பணிகள் பூர்த்தியாகியதன் பின்னர் 17ம் திகதி திறப்புவிழாவிற்கான 

பரிசோதனைக்காக இலங்கை சிவில் விமான போக்குவரத்து அதிகார சபையின் அதிகாரிகள் குழு விமான நிலையத்தின் தரத்தினை பரிசோதிக்க வருகை தரவுள்ளனர்.

அவ்வாறு வருகை தரும் குழுவினர் சான்றிதழ் வழங்கப்படும் பட்சத்தில் 17ம் திகதி முதல் தடவையாக பரீட்சார்த்தமாக விமானி மட்டும் பயணிக்கும் விமானம் யாழ்ப்பாணம் 

விமான நிலையத்தினை வந்தடைந்து விமான நிலையத்தை சுற்றி வட்டமடித்து விமான ஓடு பாதையில் விமானத்தை தரை இறக்க முடியுமா என்பதனை கண்டறிவார். 

போதிய வசதி உண்டு என விமானி எண்ணும் சந்தர்ப்பத்திலேயே விமானம் தரை இறங்கும் அவ்வாறு குறித்த விமானம் தறை இறங்கினால் மட்டுமே அடுத்த கட்டமாக 

பயணிகளுடனான விமான சேவைக்கு ஒப்புதல் அளிக்கப்படும். அதனால் விமான நிலையம் எதிர் வரும் 17ம் திகதி திறக்கப்பட்டாலும் இம்மாதம் இறுதியிலேயே பயணிகள் 

பயணிக்கும் நிலமை ஏற்படும். அவ்வாறு பயணிகள் சேவை ஆரம்பிக்கும்போதும் பகல்சேவைகள் மட்டுமே இடம்பெறும் இரவு சேவைகளும் அதிக மழைகாலத்திலும் 

சேவையில் ஈடுபடும் வசதிகள் தற்போது விமான ஓடுபாதையில் கிடையாது. அதாவது இரவு சேவைக்கான விசேட மின் ஒளி சேவை இதுவரை பொருத்தப்படவில்லை.

இதேநேரம் குறித்த யாழ்ப்பாணம் விமான சேவையினை ஆரம்பிப்பதில் கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலைய அதிகாரிகளே தாமதம் ஏற்படுத்துவதாகவும் சுட்டிக்காட்டப்படுகின்றது. 

அதாவது தற்போது வாரம் ஒன்றிற்கு கட்டுநாயக்காவில் இருந்து சென்னைக்கு 50 விமான சேவை இடம்பெறுவதன் மூலமே குறித்த விமான நிலையத்திற்கு அதிக வருமானம் கிடைப்பதனால் 

யாழ்ப்பாணம் விமான சேவை ஆரம்பித்தால் இச் சேவை குறைவடையும் என அதிகாரிகள் கருதுகின்றனர் என பெயர் குறிப்பிட விரும்பாத அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு