நீராவியடி பிள்ளையாா் ஆலய வளாகத்தில் அடாத்தாக கட்டப்பட்ட விகாரைக்கு புதிய விகாராதிபதி..!

ஆசிரியர் - Editor I
நீராவியடி பிள்ளையாா் ஆலய வளாகத்தில் அடாத்தாக கட்டப்பட்ட விகாரைக்கு புதிய விகாராதிபதி..!

முல்லைத்தீவு செம்மலை நீராவியடி பிள்ளையாா் ஆலய வளாகத்திற்குள் அடாத்தாக அமைக்கப் பட்ட விகாரையின் விகாராதிபதி இறந்த நிலையில், 

குறித்த விகாரைக்கு பௌத்த கடும்போக்குவாத பீடமான அமரபுர நிக்காயா புதிய விகாராதிபதி ஒருவரை நியமித்திருக்கின்றது. 

அவா் நியமிக்கப்பட்டு ஒரு வாரமாகும் நிலையிலும் விகாரைக்கு இன்னும் வரவில்லை. என கூறப் படுகின்றது. 

திருகோணமலை மலைக் கிராமமான மிகிந்தபுர என்ற இடத்தைச் சேர்ந்த ரத்தன தேவ கீர்த்தி என்ற பௌத்த பிக்குவே இவ்வாறு நியமிக்கப்பட்டுள்ளார். 

இவர் ஆசிரியர் என்றும் தெரிவிக்கப்பட்டது.நியமனம் வழங்கப்பட்டு ஒருவாரமாகியும் அவர் நீராவியடி விகாரைக்கு இன்னும் வரவில்லை என்று பொலிஸார் தெரிவித்தனர். 

முல்லைத்தீவு நீதிமன்றில் விகாரையின் பொறுப்பானவர் அடுத்த வாரம் முற்படுத்த வேண்டும் என்று காத்திருக்கும் பொலிஸாருக்கு

புதிய விகாராதிபதியும் வருகையும் எதிர்பார்ப்பாக உள்ளது என்று அறியமுடிகிறது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு