புதுக்குடியிருப்பு- ஒட்டுசுட்டான் வீதியில் கோர விபத்து..! 44 வயதான குடும்பஸ்த்தா் உயிாிழப்பு..

ஆசிரியர் - Editor I
புதுக்குடியிருப்பு- ஒட்டுசுட்டான் வீதியில் கோர விபத்து..! 44 வயதான குடும்பஸ்த்தா் உயிாிழப்பு..

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு- ஒட்டுசுட்டான் வீதியில் இன்று மாலை இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்த்தா் ஒருவா் சம்பவ இடத்திலேயே உயிாிழந்துள்ளாா். 

இன்று மாலை 3.40 மணியளவில் இடம்பெற்ற இந்த விபத்தில் நல்லதம்பி இராசகுமாரன் என்ற 44 வயதான குடும்பஸ்த்தரே உயிாிழந்துள்ளாா். 

உயிாிழந்த நபா் தனது மோட்டாா் சைக்கிளில் சென்று கொண்டிருந்த நிலையில் பாரவூா்தியுடன் மோதி விபத்து இடம்பெற்றிருக்கின்றது. 

இதேவேளை பாரவூா்தியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளாா். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு