15ம் திகதிக்கும் 25ம் திகதிக்கும் இடையில் மீண்டும் தாக்குதல்..! பேராயா் எச்சாிக்கை. தேவாலயங்களுக்கு பாதுகாப்பு..

ஆசிரியர் - Editor I
15ம் திகதிக்கும் 25ம் திகதிக்கும் இடையில் மீண்டும் தாக்குதல்..! பேராயா் எச்சாிக்கை. தேவாலயங்களுக்கு பாதுகாப்பு..

உயிா்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதலை ஒத்ததான தாக்குதல் இம்மாதம் 15ம் திகதி தொடக்க ம் 25ம் திகதிக்குள் நடத்தப்படலாம். எனவே பாதுகாப்பை உறுதிப்படுத்துங்கள். 

மேற்கண்டவாறு பேராயா் மல்கம் ரஞ்சித் ஆண்டகை ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளாா். இந் நிலையில் இலங்கையில் பல தேவாலயங்களுக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. 

குறிப்பாக இன்று வவுனியாவில் உள்ள தேவாலயங்களுக்குள் மோப்பநாய் சகிதம் பொலிஸார் திடீர் சோதனைகளை மேற்கொண்டனர்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின் இலங்கையில் உள்ள தேவாலயங்களுக்கு பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது. எனினும் இரு மாதங்களின் பின் 

வழமைக்கு திரும்பியிருந்த நிலையில் மீண்டும் சில நாட்களாக வவுனியாவில் பாதுகாப்பு சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு வருகிறது.

இந் நிலையில் இன்று (06.10) காலை வவுனியாவில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களுக்கு மோப்பநாய் சகிதம் சென்ற பொலிஸார் ஆலய வளாகங்களை பரிசோதனை செய்திருந்தனர். 

இதேவேளை அண்மையில் யாழ் உட்பட பல பகுதிகளில் வெடிமருந்துகள், ஆயுதங்கள் பாதுகாப்பு பிரிவினரால் மீட்கப்ப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு