14ம் திகதி இந்தியாவிலிருந்து வரும் பயணிகள் விமானம் பலாலியில் தரையிறங்கும்..!

ஆசிரியர் - Editor I
14ம் திகதி இந்தியாவிலிருந்து வரும் பயணிகள் விமானம் பலாலியில் தரையிறங்கும்..!

யாழ்ப்பாணம் சா்வதேச விமான நிலையத்தில் 14ம் திகதி இந்தியாவிலிருந்துவரும் 1வது பயணி கள் விமானம் தரையிறங்கவுள்ளது. 

எயர் இந்தியா விமான நிறுவனத்தின் துணை நிறுவனமான அலையன்ஸ் எயர் நிறுவனத்தின் விமானம், வரும் 14ஆம் திகதி யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் 

முதலாவதாக தரையிறங்கவுள்ளதாக, சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபை தெரிவித்துள்ளது.

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் எனப் பெயரிடப்பட்டுள்ள பலாலி விமான நிலைய சீரமைப்பு பணிகள் நிறைவுக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், 

இதன் திறப்பு விழாவின் அடையாளமாகவே, அலையன்ஸ் எயர் விமானம் தரையிறங்கவுள்ளது. சென்னையில் இருந்து வரும் முதல் விமானம் 

சுற்றுலாப் பயணிகளையும், வணிகப் பிரமுகர்களையும் சென்னையில் இருந்து வரும் முதல் விமானம் சுற்றுலாப் பயணிகளையும், வணிகப் பிரமுகர்களையும் ஏற்றிவரவுள்ளது.

எயர் இந்தியா நிறுவனம் யாழ்ப்பாணம் மற்றும் சர்வதேச விமான நிலையமாக சீரமைப்பு செய்யப்படும் மட்டக்களப்பு விமான நிலையளுக்கு 

சென்னையில் இருந்து சேவையை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேவேளை, அலையன்ஸ் விமான நிறுவனம் இதுதொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு 

எதையும் இன்னமும் வெளியிடவில்லை.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு