பலாலி விமான நிலையத்தின் நுழைவாயில் அமைக்கப்படுகிறது..! காணி தனியாருக்கு சொந்தமானதாம்.

ஆசிரியர் - Editor I
பலாலி விமான நிலையத்தின் நுழைவாயில் அமைக்கப்படுகிறது..! காணி தனியாருக்கு சொந்தமானதாம்.

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தின் (பலாலி) நுழைவாயில் வளைவு அமைக்கும் பணிகள் இடம்பெற்று வருகின்றது. இதன் கட்டுமானப் பணிகள் இராணுவத்தினரால் மேற்கொள்ளப்படுகின்றது.

விமான நிலையத்தின் நுழைவாயில் மேற்குப் புறமாக மாற்றப்பட்டதால் கட்டுவன்- மயிலிட்டி வீதியுடன் இணைக்கப்படுகின்றது.

நுழைவாயில் அமையும் காணிபகுதி இராணுவக் கட்டுப்பாட்டில் இருந்த நிலையில் தற்பேது இப்பகுதி விமான நிலைய நுழைவாயில் அமைக்கப்படுவதால் திறந்துவிடப்படுகின்றது. 

இதுவொரு தனியார் நிலமாகும். தெல்லிப்பழை- கட்டுவன் சந்தி- கட்டுவன் மயிலிட்டி வீதியும் காப்பெற் வீதியாக புனரமைப்பு செய்யப்பட்டுவருகின்றது.

நன்றி- நிருஜன் செல்வநாயகம்..

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு