யாழ்ப்பாணம் சா்வதேச விமான நிலையம் 17ம் திகதி திறக்கப்படுகிறது..! ஜனாதிபதி, பிரதமா் வருகை..

ஆசிரியர் - Editor I
யாழ்ப்பாணம் சா்வதேச விமான நிலையம் 17ம் திகதி திறக்கப்படுகிறது..! ஜனாதிபதி, பிரதமா் வருகை..

யாழ்ப்பாணம் சா்வதேச விமான நிலையம் இம் மாதம் 17ம் திகதி திறந்துவைக்கப்படவுள்ள நிலையில் திறப்பு விழாவுக்காக ஜனாதிபதி, பிரதமா் யாழ்ப்பாணம் வருகைதரவுள்ளனா். 

பலாலி விமான நிலையம் முதல்கட்டமாக பிராந்திய விமான நிலையமாக மாற்றப்பட்டு அதனைத் தொடர்ந்து சர்வதேச விமான நிலையமாக மாற்றும் நோக்கில் 

துரித அபிவிருத்தி இடம்பெறும் நிலையில் குறித்த விமான நிலையம் ஒக்டோபர் 16ஆம் திகதி திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டு பலாலி விமான நிலையத்தினை 

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் எனப் பெயர் மாற்றுவதற்கான அமைச்சரவை அங்கீகாரமும் பெறப்பட்டது.

இந்த நிலையில் முதல் கட்ட பணிகள் நிறைவுறுத்தப்பட்டு 17ஆம் திகதி இந்தியாவிற்கான விமான சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில்

ஆரம்ப நிகழ்விற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கா உள்ளிட்ட முக்கியஸ்தர்களுடன் 

சிவில் விமான போக்குவரத்து அதிகார சபையின் உயர் அதிகாரிகளும் சமூகமளிக்கவுள்ளனர். இதற்காக யாழில் இருந்து அழைக்க வேண்டிய 

பிரமுகர்களின் பெயர் விபரம் மாவட்டச் செயலகத்திடம் கோரப்பட்டுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு