நந்திக்கடல், நாயாறு களப்பு பகுதிகளில் வனஜீவராசிகள் திணைக்களம் ஆக்கிரமித்த காணிகள் தொடா்பாக ஆளுநா் ஆராய்வு..

ஆசிரியர் - Editor I
நந்திக்கடல், நாயாறு களப்பு பகுதிகளில் வனஜீவராசிகள் திணைக்களம் ஆக்கிரமித்த காணிகள் தொடா்பாக ஆளுநா் ஆராய்வு..

நாயாறு களப்பு மற்றும் நந்திக்கடல் களப்பு பகுதிகளில் வனஜீவராசிகள் திணைக்களத்தினால் காணிகள் கையகப்படுத்தப்பட்டுள்ள நிலையில், பாதிக்கப்பட்ட மக்களின் முறைப்பாட்டினடிப் படையில் ஆளுநா் மேற்படி விடயம் தொடா்பாக ஆராய்ந்துள்ளாா். 

2017ஆம் ஆண்டு வனஜீவராசிகள் திணைக்களத்தினர் நாயாறு மற்றும் நந்திக்கடல் பகுதியினை வர்த்தமானி அறிவத்தல் மூலம் தமது கட்டுப்பாட்டுக்கள் கொண்டுவதந்தனர். ஆனாலும் அப்பிரதேசத்தினுள் மக்களினுடைய தனியார் காணிகளும் 

வயற்காணிகளும் இருந்தமையினால் தற்பொழுது வனஜீவராசிகள் திணைக்களத்திற்கும் அப்பகுதி மக்களுக்குமிடையில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. எனவே இது தொடர்பில் இக்கூட்டத்தில் ஆராய்ப்பட்டது.

இது தொடர்பில் கரைத்துறைப்பற்று பிரதேச செயலாளர் வனஜீவராசிகள் திணைக்களத்தினுள் கொண்டுவரப்பட்ட மக்களின் காணிகளின் அளவினை இனங்கண்டு அவற்றினை மீளவும் வர்த்தமானி அறிவித்தலின் படி பொதுமக்களுக்கு பெற்றுக்கொடுப்பதற்கான 

ஆரம்பகட்ட நடவடிக்கையினை மேற்கொள்ளுமாறு ஆளுநர் ஆலோசனை வழங்கினார். மேலும், இவ்விரண்டு களப்பு பகுதிகளிலும் மீன்பிடி தொழிலில் ஈடுபடுவதற்கு வனஜீவராசிகள் திணைக்களம் தடைவிதித்துவருவதாகவும் 

பொதுமக்கள் முறைப்பாடு தெரிவித்திருந்தமை தொடர்பிலும் இக்கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது. அப்பகுதி மக்கள் காலாகாலமாக செய்துவந்த பாரம்பரிய மீன்பிடிமுறையை செய்யமுடியும் என்றும் இந்த இரு களப்பு பகுதிகளையும் 

சுத்தம் செய்ய 2018 இல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டும் இது வரை எதுவித முயற்சிகளும் மேற்கொள்ளப்படவில்லை என்றும் முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் ஆளுநர் கவனத்திற்கு கொண்டுவந்தார்.

இதனைத்தொடர்ந்து யாழ் பல்கலைக்கழகத்தின் மீன்பிடியியல் துறையினை தொடர்ப்புகொண்டு களப்பு பகுதி மீன்படி தொடர்பில் ஆய்வு செய்து உடனடியாக வனவிலங்கு திணைக்களத்திற்கு சமர்ப்பித்து நந்திக்கடல் பகுதியில் 

துப்பரவுப்பணியை மேற்கொள்ளுமாறும் அதற்கு பூரண ஒத்துழைப்பை வழங்குமாறும் வனவஜீவராசிகள் திணைக்களத்திற்கு ஆளுநர் பணிப்புரை விடுத்தார். வன ஜீவராசிகள் திணைக்கத்தினால் பொதுமக்களின் காணிகள் 

விவசாய நிலங்கள் என்பன இதற்குள் அடங்குவதால் அவற்றை மீள் வர்த்தமானி மூலம் ஜனாதிபதியின் உதவியுடன் மக்களிடம் மீண்டும் கையளிக்க நடவடிக்கை எடுப்பதாக ஆளுநர் இதன்போது மக்களுக்கு நம்பிக்கை தெரிவித்தார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு