மக்களின் குடிநீா் கிணற்றிலிருந்து தண்ணீா் எடுக்காதீா்கள்..! மாற்று வழியை தேடுங்கள். ஆளுநா் இராணுவத்திற்கு அறிவுரை..

ஆசிரியர் - Editor I
மக்களின் குடிநீா் கிணற்றிலிருந்து தண்ணீா் எடுக்காதீா்கள்..! மாற்று வழியை தேடுங்கள். ஆளுநா் இராணுவத்திற்கு அறிவுரை..

முல்லைத்தீவு- கணுக்கேணி கிராமத்தில் குழாய் கிணற்றிலிருந்து அளவுக்கு அதிகமான நீரை படையினா் எடுப்பது தொடா்பாக பொதுமக்கள் கொடுத்த முறைப்பாட்டினடிப்படையில் இந்த விடயம் தொடா்பா இன்று ஆளுநா் சுரேன் ராகவன் தலமையில் ஆராயப்பட்டுள்ளது. 

இந்த கூட்டம் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் இன்று இடம்பெற்றது.இதனுடன் தொடர்புடைய கரைத்துறைப்பற்று பிரதேச செயலாளர், இராணுவத்தினர், பிரதேசத்தின் மக்கள், பிரதேச சபை தவிசாளர் உள்ளிட்டோர் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டதுடன் 

இப்பிரச்சனை தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டது. இதன்போது குறித்த கணுக்கேணி கிராமத்தில் நீர் எடுப்பதற்கு மாற்றீடாக நீர் எடுக்கக்கூடிய வேறு மூன்று இடங்களை கண்டறிந்து அதில் மிகப் பொருத்தமான இடத்தினை தெரிவு செய்து 

அதிலிருந்து நீரினை எடுக்கக்கூடி வழிமுறைகளுக்கு செல்வதற்கு ஆளுநர் இதன்போது ஆலோசனை வழங்கினார்.இதனை ஏற்றுக்கொண்ட சம்பந்தப்பட தரப்பினர் அனைவரும் ஒக்டோபர் 31 ஆம் திகதிக்கு முன்னர் இந்தப்பிரச்சனையை 

தீர்த்துக் கொள்வதாக தெரிவித்தனர்.வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா, சார்ள்ஸ் நிர்மலநாதான் ஆகியோரும் இதன்போது கலந்து கொண்டிருந்தனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு