மட்டக்களப்பு- வந்தாறுமுலையில் 3 பிள்ளைகளின் தந்தை உயிாிழப்பு, மேலும் ஒருவா் படுகாயம்..!

ஆசிரியர் - Editor I
மட்டக்களப்பு- வந்தாறுமுலையில் 3 பிள்ளைகளின் தந்தை உயிாிழப்பு, மேலும் ஒருவா் படுகாயம்..!

மட்டக்களப்பு- வந்தாறுமூலை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 3 பிள்ளைகளின் தந்தை உயிாிழந் துள்ளதுடன், மற்றொருவா் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றாா். 

இவ்விபத்தில் மட்டக்களப்பு பதுளை வீதியை அண்டியுள்ள காயான்குடா கிராமத்தைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான தங்கராசா சுதாகரன் (வயது 34) என்பவரே பலியாகியுள்ளார். அவருடன் மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்து சென்று 

கொண்டிருந்த ஜீவபுரம் பாலையடித்தோணாவைச் சேர்ந்த குருபரன் சுதர்ஷ‪ன் (வயது 25) என்ற இளைஞர் காயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக உறவினர்கள் தெரிவித்தனர்.

நேற்று புதன்கிழமை சந்திவெளியிலிருந்து செங்கலடி நோக்கி செல்லும்போது வந்தாறுமூலையில் வைத்து வேன் ஒன்றில் மோதுண்ட நிலையிலே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.இச்சம்பவம் தொடர்பாக 

வேன் சாரதி கைது செய்யப்பட்டுள்ள நிலையில் விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்று வருவதாக ஏறாவூர்ப் பொலிஸார் தெரிவித்தனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு