நீராவியடியில் இந்து ஆலயம் எப்போது இருந்தது..? வரலாறு தொியாமல் சம்மந்தன், மாவை பேசக்கூடாது.. உளறுகிறாா் எஸ்.பி..

ஆசிரியர் - Editor I
நீராவியடியில் இந்து ஆலயம் எப்போது இருந்தது..? வரலாறு தொியாமல் சம்மந்தன், மாவை பேசக்கூடாது.. உளறுகிறாா் எஸ்.பி..

முல்லைத்தீவு நாயாறு பகுதியில் பௌத்த விகாரை ஒன்றே இருந்தது. அங்கு இந்து ஆலயம் இருக் கவில்லை. அதை அறிந்த பின்பே சம்மந்தன், மாவை போன்றவா்கள் கருத்து வெளியிடவேண்டும். என நாடாளுமன்ற உறுப்பினா் எஸ்.பி.திஸாநாயக்க கூறியுள்ளாா். 

முல்லைத்தீவு நாயாறு பகுதியில் எந்தவொரு இந்து ஆலயமும் இருக்கவேயில்லை. ஆரம்பத்திலிருந்து குருகஹந்த என்ற பௌத்த விகாரை மாத்திரமே காணப்பட்டது. அந்த விகாரையின் விகாரதிபதியே சில இந்து தெய்வங்களின் சிலைகளை 

குறித்த விகாரையில் வைத்து பூஜித்தார். அதேபோன்று இது பௌத்தர்களின் வணக்கத்திற்குரிய இடமாகவே காணப்பட்டது என்பதற்கு வரலாற்று ரீதியாகவும், தொல்பொருள் திணைக்களத்தினதும் ஆதாரங்கள் உள்ளன.

எனவே வரலாற்றையும், உண்மையையும் சரியாக ஆராயாமல் பௌத்த மற்றும் இந்து மதத்தை மையப்படுத்தி சிங்களவர்களுக்கும், தமிழர்களுக்கும் இடையில் முரண்பாட்டைத் தோற்றுவிப்பதற்கு எவரும் முயற்சிக்க வேண்டாம் என்றும் கூறினார். 

பத்தரமுல்லையில் உள்ள அவருடைய இல்லத்தில் இன்று புதன்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு