நீாில் அடித்துச் செல்லப்பட்ட வயோதிபா் 2 நாட்களின் பின் சடலமாக மீட்பு..!

ஆசிரியர் - Editor I
நீாில் அடித்துச் செல்லப்பட்ட வயோதிபா் 2 நாட்களின் பின் சடலமாக மீட்பு..!

நீாில் அடித்துச் செல்லப்பட்ட 54 வயதான முதியவா் 2 நாட்களின் பின்னா் இன்று சடலமாக மீட்கப்பட்டிருக்கின்றாா். 

பொகவந்தலாவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிலானி தோட்டத்தில் நேற்று முன்தினம் மதியம் நீரில் அடித்துச் செல்லப்பட்ட 54 வயதுடைய நபரே இவ்வாறு இரண்டு நாட்களின் பின் 

சடலமாக மீட்க்கப்பட்டுள்ளார். நேற்று முன்தினம் மதியம் பெய்த கடும் மழையின் காரணமாக காசல்ரீ நீர்த்தேக்கத்திற்கு நீர் வழங்கும் கெசல்கமுவ ஒயா 

பெருக்கெடுத்ததன் காரணமாக பொகவந்தலாவ நகரப்பகுதிக்கு சென்றுவிட்டு மீண்டும் வீடு திரும்பிக் கொண்டிருந்த வேளையிலேயே குறித்த நபர் இவ்வாறு நீரில் அகப்பட்டு 

இழுத்துச் செல்லப்பட்டார். இந்நிலையில் இன்று கடற்படையினரின் தீவிர தேடலின் பின்னர் பொகவந்தலாவ கிலானி தோட்டபகுதியை சேர்ந்த 54 வயதுடைய 

இரண்டு பிள்ளைகளின் தந்தை இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு