யாழ்.மாவட்டத்தில் 4 பாடசாலைகளுக்கு “திறன் வகுப்பறைகள்..” வடக்கு அபிவிருத்தி அமைச்சு வழங்கியது..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்தில் 4 பாடசாலைகளுக்கு “திறன் வகுப்பறைகள்..” வடக்கு அபிவிருத்தி அமைச்சு வழங்கியது..

“திறன் வகுப்பறைகள்” செயற்றிட்டம் யாழ்.மாவட்டத்தில் 4 பாடசாலைகளில் உத்தியோகபூா்வ மாக திறந்துவைக்கப்பட்டிருக்கின்றது. 

தேசிய கொள்கைகள் பொருளாதார அலுவல்கள் மீள்குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு, வடக்கு மாகாண அபிவிருத்தி அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ், 

அமைக்கப்பட்ட " திறன் வகுப்பறைகள்" தேசிய கொள்கைகள் பொருளாதார அலுவல்கள் மீள்குடியேற்ற அமைச்சின்  மேலதிக செயலாளர் பா. செந்தில்நந்தனனால்

யா. மீசாலை வீரசிங்கம் மத்திய கல்லூரி, யா. ஆழியவளை சீ.சீ.த.க.வித்தியாலயம், யா.வெற்றிலைக்கேணி பரமேஸ்வரா வித்தியாலயம், 

யா. கட்டைக்காடு றோ.க.த.க ஆகிய பாடசாலைகளில் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. 

இந்நிகழ்வில் மாவட்ட செயலக மேலதிக அரசாங்க அதிபர், மாவட்ட செயலக மேலதிக அரசாங்க அதிபர் ( காணி), மருதங்கேணி பிரதேச செயலர், 

கோட்டக் கல்வி அலுவலர் மற்றும் அரச உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டார்கள்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு