வைத்தியசாலைக்குள் புகுந்த நாய்..! 5 நோயாளிகளையும், இரு தாதியா்களையும் கடித்து குதறியது. சுட்டு கொன்ற பொலிஸாா்..

ஆசிரியர் - Editor I
வைத்தியசாலைக்குள் புகுந்த நாய்..! 5 நோயாளிகளையும், இரு தாதியா்களையும் கடித்து குதறியது. சுட்டு கொன்ற பொலிஸாா்..

ஹொறவ பொத்தான பகுதியில் உள்ள வைத்தியசாலை ஒன்றுக்குள் புகுந்த நாய் தாதியா்கள் மற்றும் நோயாளிகளை கடித்து குதறியுள்ளது. 

5 நோயாளிகளும் இரண்டு தாதிகளும் நாய் கடிக்குள்ளான நிலையில் அனுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த பகுதியில் அதிகரித்துள்ள நாய்களின் தொல்லையால் பல முறை இவ்வாறான சமபவங்களுக்கு முகம் கொடுக்க நேரிட்டுள்ளதாக 

வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விசர் நாய் ஒன்றே இவ்வாறு கடித்து குதறியுள்ளதாகவும், 

இது தொடர்பில் உரிய அதிகாரிடம் அறிவித்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது. மக்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தும் நோக்கில் 

குறித்த நாயை பொலிஸார் சுட்டுக்கொலை செய்ததாக வைத்தியசாலை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு