ஆனையிறவில் அதிகாலையில் நடந்த கோர விபத்து..! ஒருவா் உயிாிழப்பு, 2 போ் ஆபத்தான நிலையில்..

ஆசிரியர் - Editor I
ஆனையிறவில் அதிகாலையில் நடந்த கோர விபத்து..! ஒருவா் உயிாிழப்பு, 2 போ் ஆபத்தான நிலையில்..

கிளிநொச்சி- ஆனையிறவு பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவா் பலியான துடன் இருவா் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்ப ட்டிருக்கின்றனா். 

குறித்த விபத்து இன்று அதிகாலை மூன்று மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. யாழ்ப்பாணத்திலிருந்து கிளிநொச்சி நோக்கி பயணித்த இரண்டு லொறி வாகனங்களுடன் கொழும்பிலிருந்து யாழ்.நோக்கி பயணித்த ஹயஸ் ரக வேன் 

மோதியதிலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இச் சம்பத்தில் வேன் சாரதி சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளதோடு, லொறி சாரதி மற்றும் ஹயஸ் வாகனத்தில் பயணி்த்த நபர் ஒருவரும் காயமடைந்து கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு