மன்னாாில் மாதா ஆலயத்தை உடைத்து திருட்டு..!

ஆசிரியர் - Editor I
மன்னாாில் மாதா ஆலயத்தை உடைத்து திருட்டு..!

மன்னாா்- மாந்தை மாதா ஆலயத்தின் பங்கு பணிமனை கதவுகளை உடைத்து உட்புகுந்த திருடா் கள் ஒரு தொகை பணத்தை கொள்ளையிட்டுள்ளனா். 

மாந்தை மாதா ஆலயத்தின் பங்குத்தந்தை இல்லாத நேரத்தில் குறித்த திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பங்கு மனைக்கு திருப்பி வந்த நிலையில் கதவுகள் உடைக்கப்பட்டு பணம் திருடப்பட்ட சம்பவம் இடம் பெற்றுள்ளதை அறிந்து கொண்ட பங்குத்தந்தை 

உடனடியாக மன்னார் ஆயர் இல்லத்திற்கு தெரியப்படுத்தினார். இதையடுத்து உடனடியாக அருட்தந்தை எமிலியான்ஸ் பிள்ளை அடிகளார் 

மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தார். முறைப்பாட்டை தொடர்ந்து மன்னார் பொலிஸார் குறித்த ஆலய பகுதிக்கு சென்று விசாரனைகளையும், 

சோதனைகளையும் மேற்கொண்டுள்ளனர். திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்ட நபர் தொடர்பில் கிடைக்கப்பெற்ற ஆதாரத்தின் அடிப்படையில் 

மன்னார் பொலிஸார் மேலதிக விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு