யாழ்.திருநெல்வேலியில் வர்த்தக நிலையங்களில் சோதனை..! பாவனைக்குதவாத பொலித்தீன்கள் மீட்பு..

ஆசிரியர் - Editor I
யாழ்.திருநெல்வேலியில் வர்த்தக நிலையங்களில் சோதனை..! பாவனைக்குதவாத பொலித்தீன்கள் மீட்பு..

யாழ்.திருநெல்வேலி பகுதியில் பாவனைக்கு உதவாத பொலித்தீன் பைகளை வைத்திருந்த குற்றச்சாட்டில் வர்த்தக நிலைய உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப் பட்டிருக்கின்றது. 

திருநெல்வேலி பகுதியில் உள்ள நட்சத்திர விடுதிஇ உணவகங்கள் உள்பட வர்த்தக நிலையங்களில் நேற்றும் இன்றும் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே இவ்வாறு பாவனைக்கு தடை செய்யப்பட்ட பொலித்தீன் பைகள் கைப்பற்றப்பட்டன.

மத்திய சுற்றாடல் அதிகார சபை இபாவனையாளர் அலுவல்கள் அதிகார சபை மற்றும் கோப்பாய் பொலிஸார் இணைந்து இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கையை முன்னெடுத்தனர்.

குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக யாழ்ப்பாணம் மேலதிக நீதிவான் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு