ஊருக்குள் புகுந்த யானைப்படை..! விட்டியடிக்க போராடிய அதிகாாிகளுக்கு படுதோல்வி..

ஆசிரியர் - Editor I
ஊருக்குள் புகுந்த யானைப்படை..! விட்டியடிக்க போராடிய அதிகாாிகளுக்கு படுதோல்வி..

காரைதீவு- மாவடிப்பள்ளி பகுதியில் ஊருக்குள் நுழைந்த 35ற்கும் அதிகமான யானைகளை கட்டு ப்படுத்த வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாாிகள் மேற்கொண்டிருந்த முயற்சிகள் படுதோல்வி யடைந்துள்ளது.

திங்கட்கிழமை மாலை இச்சம்பவம் இடம்பெற்றதுடன் விரட்டி செல்லப்பட்ட யானைகள் நகர்ந்து செல்லாமல் ஒரு இடத்தில் கூடி நிற்கின்றமை குறிப்பிடத்தக்கது. வனவிலங்கு அதிகாரிகள் குறித்த யானைகளை அவ்விடத்தில் இருந்து 

அகற்றுவதற்காக வெடிகளை பயன்படுத்தி வருகின்றனர். இதனால் மாவடிப்பள்ளி பாலத்தில் போக்குவரத்து தடைப்பட்டதுடன் பொதுமக்கள் அவ்விடத்தில் அதிகளவாக குவிந்தனா். 

மேலும்   இப் பிரதேசத்தில்  கொட்டப்படும்  குப்பைகளை தினந்தோறும் 50க்கும் மேற்பட்ட யானைகள் உண்ணுவதற்கு  வருகை தருவதுடன் அருகில் உள்ள பொதுமக்களின் உடமைகளுக்கும் சேதம் விளைவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு