டிப்பா் வாகனம் மோதியதில் சிறுமி பாிதாபகரமாக பலி..! திருகோணமலையில் சம்பவம்..

ஆசிரியர் - Editor I
டிப்பா் வாகனம் மோதியதில் சிறுமி பாிதாபகரமாக பலி..! திருகோணமலையில் சம்பவம்..

திருகோணமலை- கண்டி வீதியில் டிப்பா் வாகனத்துடன் மோதி சிறுமி ஒருவா் சம்பவ இடத்திலே யே உயிாிழந்துள்ளாா். 

கல்ஒயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹதரஸ்கொட்டுவ பகுதியிலே இவ்விபத்துச் சம்பவம் நிகழ்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இவ்விபத்துச் சம்பவம் இன்று மாலை இடம்பெற்றுள்ளதாக கல்ஒயா பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

இதன் போது ஹதரஸ்கொட்டுவ பகுதியைச் சேர்ந்த ஒன்பது வயதுடைய டபிள்யு.எம்.பிரியங்கிக்கா என்ற சிறுமியே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

சிறுமி வீதியை கடக்க முற்பட்ட வேளை வேகமாக சென்ற டிப்பர் வாகனம் ஒன்ற சிறுமி மீது மோதியதினாலே சிறுமி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

இதையடுத்து குறித்த சிறுமியின் சடலம் கந்தளாய் தள வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதோடு, 

உறவினர்களிடம் கையளிக்க நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை டிப்பர் வாகனத்தின் சாரதியை கைது செய்துள்ளதோடு நீதிமன்றில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு