மீண்டும் இராணுவ சோதனை சாவடிகள்..! யாழ்.குடாநாட்டில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது..

ஆசிரியர் - Editor I
மீண்டும் இராணுவ சோதனை சாவடிகள்..! யாழ்.குடாநாட்டில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது..

யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களில் உயிா்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதலின் பின்னா் அமைக்கப்பட்டு கடந்த சில மாதங்களுக்கு முன்னா் அகற்றப்பட்ட இராணுவ சோதனை சாவடிக ள் மீண்டும் ஆங்காகே முளைத்திருக்கின்றது. 

கண்டி நெடுஞ்சாலையில், நாவற்குழி பாலத்திலும் இராணுவ சோதனைச் சாவடி அமைக்கப்பட்டுள்ள போதிலும் அதில் சந்தேகத்துக்கு இடமான வாகனங்கள் மறிக்கப்பட்டு சோதனைகள் மேற்கொள்ளப்படுவதுடன் 

வாகன இலக்கங்களையும் பதிவு செய்கின்றனர்.உயிர்த்த ஞாயிறு தினத்தன்று மேற்கொள்ளப்பட்ட தற்கொலைத் தாக்குதல்களை அடுத்து யாழ். குடாநாட்டின் பல பகுதிகளிலும் இராணுவ, பொலிஸ் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு 

சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. கடந்த மாதம் முதல் இந்தச் சோதனை சாவடிகள் அகற்றப்பட்டன. இந்த நிலையில் மீண்டும் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு யாழ். குடா நாட்டின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு