கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினா்களை கேளா கேள்வி கேட்ட முல்லைத்தீவு மக்கள்..!

ஆசிரியர் - Editor I
கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினா்களை கேளா கேள்வி கேட்ட முல்லைத்தீவு மக்கள்..!

முல்லைத்தீவு- நீராவியடி பிள்ளையாா் ஆலய விவகாரத்தில் பங்கெடுக்காத நிலையில் நேற்று முல்லைத்தீவுக்கு சென்ற நாடாளுமன்ற உறுப்பினா்களை மக்கள் கேளா கேள்வி கேட்டுள்ளனா். 

நேற்று முல்லைதீவிற்கு விஜயம் செய்த சுமந்திரன் தன்னுடன் சிவமோகன்,சாந்தி சிறீஸ்கந்தராசாவையும் துணைக்கு இழுத்து சென்றிருந்தார்.

எனினும் அவர்களை சுற்றிவளைத்துக்கொண்ட தமிழர் மரபுரிமையினர் மற்றும் இளைஞர்கள் உண்டு இல்லையென கிழித்து தொங்கவிட்டிருந்தனர்.

வழமையாக சால்ஜாப்புக்களை சொல்லி தப்பித்துக்கொள்ளும் சுமந்திரன் கூட ஒரு கட்டத்தில் முடியாமல் கையறு நிலையில் மௌனமானதாக தெரியவருகின்றது.

இந்த அரசிற்கு முண்டு கொடுத்து எதனை சாதித்தீர்கள் என இளைஞர்கள் கேள்வியால் துளைக்க கடைசியில் மௌனமே கூட்டமைப்பிடம் எஞ்சியிருந்துள்ளது.

நீராவியடி பிள்ளையார் ஆலய சூழலில் இடம்பெற்ற குழப்பங்களின் போது சாந்தி சிறீஸ்கந்தராசா தவிர ஏனையவர்கள் பதுங்கிக்கொண்டமை தெரிந்ததே.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு