புதுக்குடியிருப்பு சுதந்திரபுரம் பகுதியில் பெருமளவு வெடிபொருட்கள் மீட்பு..!

ஆசிரியர் - Editor I
புதுக்குடியிருப்பு சுதந்திரபுரம் பகுதியில் பெருமளவு வெடிபொருட்கள் மீட்பு..!

புதுக்குடியிருப்பு- சுதந்திரபுரம் பகுதியில் தனியாா் ஒருவருடைய காணியிலிருந்து பெருமளவு வெடிபொருட்களை பொலிஸாா் மீட்டிருக்கின்றனா்.

குறித்த வெடிப்பொருட்கள் கடந்த கால போரின் போது புதைக்கப்பட்ட தொகுதி வெடிபொருட்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளன.

சம்பவம் குறித்து புதுக்குடியிருப்பு பொலிஸாருக்கு வீட்டின் உரிமையாளரால் தகவல் கொடுக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற புதுக்குடியிருப்பு 

பொலிஸார் குறித்த இடத்தில் அடையாளம் காணப்பட்ட 8 கிளைமோர் குண்டுகளையும் 60 ரிக்னெட்டர்களையும் இனம் கண்டு அடையாளப்படுத்தியுள்ளார்கள். 

இதையடுத்து நீதிமன்ற உத்தரவுக்கு அமைய அதனை அகற்றும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு