ஜனாதிபதி தோ்தலில் நாம் என்ன செய்வது..? மக்கள் கருத்தறியும் கூட்டமைப்பின் முதல் கூட்டம் முல்லைத்தீவில்..

ஆசிரியர் - Editor I
ஜனாதிபதி தோ்தலில் நாம் என்ன செய்வது..? மக்கள் கருத்தறியும் கூட்டமைப்பின் முதல் கூட்டம் முல்லைத்தீவில்..

முல்லைத்தீவு -குமுழமுனைப் பகுதியில், 29.09.2019 இன்று, பொதுமக்களைச் சந்தித்த கூட்டமைப்பின் முக்கியஸ்தர்களான, நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா, ர் எம்.ஏ.சுமந்திரன் உட்பட்ட குழுவினர் 

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான கருத்தாய்வுக் கூட்டம் ஒன்றை நடாத்தினர்.மேலும் கரைதுறைப் பற்று பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் நிலவும் மக்களின் குறைபாடுகள் தொடர்பிலும் இங்கு பேசப்பட்டது.

குறிப்பாக பிரதேசத்தில் நிலவும் காணி அபகரிப்புகள், சட்டவிரோத மற்றும் வெளிமாவட்ட மீனவர்களின் அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கைகள், போன்ற பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டன.

இச்சந்திப்பில் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான சாந்தி சிறீஸ்கந்தராசா, சி.சிவமோகன் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர்களான து.ரவிகரன் மற்றும், ப.சத்தியலிங்கம், கே.சயந்தன் 

கரைதுறைப்பற்று பிரதேசசபை உறுப்பினர்களான சி.லோகேஸ்வரன், ம.தொம்மைப்பிள்ளை, வை.கெங்காதரன், கி.சிவலிங்கம் ஆகியோருடன் பிரதேசத்தின் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டிருந்மையும் குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு