துப்பாக்கி சூட்டுக்கு இலக்கான 14 வயது சிறுவன் உயிாிழப்பு..! துப்பாக்கி சூட்டுக்கான காரணம் வெளியானது. 3 போ் கைது..

ஆசிரியர் - Editor I
துப்பாக்கி சூட்டுக்கு இலக்கான 14 வயது சிறுவன் உயிாிழப்பு..! துப்பாக்கி சூட்டுக்கான காரணம் வெளியானது. 3 போ் கைது..

மட்டக்களப்பு- கித்துள் காட்டு பகுதியில் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்த 14 வ யது சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிாிழந்துள்ள நிலையில், 3 இளைஞா்கள் கைது செய்யப்ப ட்டுள்ளதாக பொலிஸாா் கூறியிருக்கின்றனா். 

கித்துள் பிரதேசத்தைச் சேர்ந்த சிறிக்காந்தன் தனுஜன் என்ற 14 வயது சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த சிறுவன் உட்பட 4 பேர் உள்ளுர் தயாரிப்பு கட்டுத்துவக்குடன் நேற்று மாலையில் காட்டில் வேட்டைக்கு சென்றுள்ளனர் 

இந்த நிலையில் துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில் சிறுவன் படுகாயமடைந்ததுள்ளார் இதனையடுத்து சிறுவனை கரடியனாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட:ட மேலதிக சிகிச்சைக்காக உடனடியாக 

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற நிலையில் இடையில் உயிரிழந்துள்ளார் .இச் சம்பவம் தொடர்பாக வேட்டைக்கு சிறுவனுடன் சென்ற குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த 22, 20, 14 , வயதுடைய 3 பேரை 

சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்துள்ளனர்ஊயிரிழந்தவரின் சடலம் மட்டு போதனா வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன். இது தொடர்பான மேலதிக 

விசாரணைகளை கரடியனாறு பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு