கட்சி தாவல்கள் தொடங்கியது..! தெற்கு அரசியலில் பரபரப்பு..

ஆசிரியர் - Editor I
கட்சி தாவல்கள் தொடங்கியது..! தெற்கு அரசியலில் பரபரப்பு..

ஜனாதிபதி தோ்தல் அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் தெற்கு அரசியலில் பரஸ்பரம் கட்சி தாவ ல்கள் ஆரம்பமாகியிருக்கின்றது. 

இதன்படி நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி நாவின்ன ஐக்கிய தேசியக் கட்சியில் மீண்டும் இணைந்துள்ளார்.

ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸாவுக்கு ஆதரவளிக்கும் நோக்கில் இன்று இணைந்து கொண்டார்.

சஜித் பிரேமதாஸ தலைமையில் தற்போது நடைபெற்று வரும் செய்தியாளர் மாநாட்டில் எஸ்.பி நாவின்ன பங்கேற்றுள்ளார்.

அண்மையில் ஏற்பட்ட அரசியல் புரட்சி காரணமாக ஐக்கிய தேசிய கட்சியில் இருந்து விலகி மஹிந்த தலைமையிலான 

அணியுடன் எஸ்.பி. நாவின்ன இணைந்திருந்தார்.இதேவேளை ஐக்கிய தேசிய கட்சியிலிருந்து விலகி மஹிந்தவுடன் இணைந்திருந்த 

கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்கவும் நேற்று மீண்டும் ஐக்கிய தேசிய கட்சியில் இணைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு