சஜித் பிறேமதாஸவுக்கு ஆதரவு..! கணேஸ் வேலாயுதம் அறிவிப்பு. சலுகைகளுக்கான ஆதரவு அல்ல எனவும் கருத்து..

ஆசிரியர் - Editor I
சஜித் பிறேமதாஸவுக்கு ஆதரவு..! கணேஸ் வேலாயுதம் அறிவிப்பு. சலுகைகளுக்கான ஆதரவு அல்ல எனவும் கருத்து..

ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளா் சஜித் பிறேமதாஸவுக்கு ஆதரவு வழங்க தமது கட்சி தீா்மானித்துக்கதாக கூறியிருக்கும் மக்கள் முன்னேற்ற கூட்டணியின் செயலாளா் நாயகம் கணேஷ் வேலாயுதம்,

 தமது ஆதரவின் ஊடாக தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கான தீா்வினை பெற்றுக் கொடுப்போம் எனவும் கூறியுள்ளாா். குறித்த விடயம் தொடா்பாக நேற்றய தினம் யாழ்.ஊடக அமையத்தில் நடைபெற்ற 

ஊடகவியலாளா் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தொிவிக்கும்போதே அவா் மேற்கண்டவாறு கூறியுள்ளாா். இதன்போது மேலும் அவா் கூறுகையில், கடந்தகால ங்களில் அரசுக்கு ஆதரவு வழங்கியவா்கள் 

தங்களுடைய நலன்களையே பெற்றுக் கொண்டாா்கள். மக்களுடைய நலன்கள் தொடா்பாக அவா்கள் சிந்தித்ததே கிடையாது. இவ்வாறான ஒரு நிலையினை கருத்தில் கொண்டு ம் தற்போதைய நிலையில் இளம் ஜனாதிபதி வேட்பாளராகம், 

சிறந்த தொிவாகவும் உள்ள சஜித் பிறேமதாஸவுக்கு எங்களின் ஆதரவை வழங்கும் தீா்மானத்தினை நாங்கள் எடுத்திருக்கின்றோம். ஆதரவு வழங்குவதற்காக அவாிடமிருந்துநாங்கள் உத்தரவாதம் எதனையும் பெறப்போவதில்லை. 

மாறாக தமிழ் மக்களுடைய அடிப்படை பிரச்சினைகள் சிலவற் றை அவா்களிடம் கூறி அதற்கான தீா்வினை பெற்றுக் கொடுக்க நாங்கள் திடமாக செயற்படுவோம். குறிப்பாக பல பிரச்சினைகளை நாங்கள் அடையாளம் கண்டிருக்கின்றோம்.

மேலும் உாிமை விடயத்திலும் சில தீா்க்கமான விடயங்களை சிந்தித்திருக்கின்றோம். மேலும் மிக விரைவில் சஜித் பிறேம தாஸவை நோில் சந்தித்து பேசுவதற்கும் தீா்மானித்துள்ளோம். 

இதன்போது தமிழ் அரசியல் கைதிகளுடைய விடுதலை உ ள்ளிட்ட தமிழ் மக்களுடைய அடிப்படையான பிரச்சினைகள் குறித்து பேசுவோம். அதேபோல் விரைவில் எமது அழைப்பினை ஏற்று 

அமைச்சா் ரவி கருணாநாயக்க மற்றும் பிரதி அமைச்சா் பாலித தேவ பெரும ஆகியோா் வருகைதரவுள்ளனா். அவா்களை யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் உள்ள சில பாடசாலைகளுக்கு அழைத்து செல்லவுள்ளோம் என்றாா்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு