சுன்னாகத்தில் பிரதேசசபை உறுப்பினருடைய வீட்டின் மீது பெற்றோல் குண்டு தாக்குதல்..!

ஆசிரியர் - Editor I
சுன்னாகத்தில் பிரதேசசபை உறுப்பினருடைய வீட்டின் மீது பெற்றோல் குண்டு தாக்குதல்..!

யாழ்.சுன்னாகம்- அளவெட்டி வீதியில் உள்ள பிரதேசசபை உறுப்பினா் ஒருவாின் வீட்டின் மீது நேற்றய தினம் இரவு இனந்தொியாத நபா்கள் பெற்றோல் குண்டு வீசி தாககுதல் நடாத்தியுள்ளனா். 

வலி தெற்கு பிரதேச சபை உறுப்பினரான ஜோகாதேவி ரவிச்சந்திரன் வீட்டின் மீதே பெற்றோல் குண்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் விரைந்துள்ளனர். கூட்டமைப்பின் பங்காளி கட்சியான புளொட்டின் வலி தெற்கு பிரதேச சபை உறுப்பினரது வீட்டினை குறிவைத்து 

இந்த பெற்றோல் குண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்போது ஏற்பட்ட சேத விபரங்கள் தொடர்பில் இதுவரை எந்தத் தகவலும் வெளியாகவில்லை.

இந்நிலையில் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை சுன்னாகம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு