லலித், குகன் எங்கே..? யாழ்.பேருந்து நிலையத்தில் போராட்டம்..

ஆசிரியர் - Editor I
லலித், குகன் எங்கே..? யாழ்.பேருந்து நிலையத்தில் போராட்டம்..

முன்னிலை சோசலிஷ கட்சியின் செயற்பாட்டாளா்களான லலித், குகன் காணாமல் ஆக்கப்பட்டு 8 ஆண்டுகள் கடந்த நிலையில் அவா்களுக்கு என்ன நடந்தது என்பதை வெளிப்படுத்தக்கோாி யாழ்.மத்திய பேருந்து நிலையம் முன்பாக ஆா்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டுள்ளது. 

இன்று காலை இந்த போராட்டம் இடம்பெற்றது. முன்னாள் பாதுகாப்புச்செயலாளர் கோத்தபாய ராஜபக்ச பாதுகாப்பு செயலாளராக இருந்த காலப்பகுதியில் இச்செயற்பாட்டாளர்கள் காணாமல்போயிருந்தார்கள். 

இது தொடர்பிலான வழக்கு யாழ் நீதவான் நீதிமன்றில் நடைபெற்றுவருகிறது. இதில் முன்னிலையாகுமாறு முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவிற்கு நீதிமன்றினால் அழைப்பாணை விடுக்கப்பட்டபோதும் 

பாதுகாப்பினை காரணம்காட்டி அவர் முன்னிலையாகவில்லை. எனவே வழக்கில் முன்னிலையாகி உண்மைத்தன்மையினை வெளிப்படுத்தக்கோரி ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. இதற்கு முன்னதாக யாழ்.பொதுநூலகத்தில் ஊடகசந்திப்பும் இடம்பெற்றது. 

இதில் குமார் குணரட்ணம் கலந்துகொண்டார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு