நண்பா்களுடன் நீராட சென்றபோது கடலில் மூழ்கி காணாமல்போன 12 வயது மாணவன் சடலமாக மீட்பு..!

ஆசிரியர் - Editor I
நண்பா்களுடன் நீராட சென்றபோது கடலில் மூழ்கி காணாமல்போன 12 வயது மாணவன் சடலமாக மீட்பு..!

பாடசாலை நண்பா்களுடன் கடலில் நீராடி சென்றிருந்த சமயம் காணாமல்போன மாணவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளான். 

நேற்று மதியம் 5 பாடசாலை மாணவா்கள் பொன்னாமலைகுடா கடலில் நீராடி சென்றுள்ளனா். இதன்போது கடலில் மூழ்கி தத்தளித்த நிலையில், 

4 மாணவா்கள் உயிருடன் மீட்கப்பட்டபோதும் 12 வயதான ஒரு மாணவன் கடலில் மூழ்கி காணாமல்போயிருந்தான். 

இந்நிலையில் இன்று அதிகாலை கடலுக்குள் தேடுதலுக்கு சென்ற மீனவர்களால் கடலுக்குள் பாறையின் மீது மிதந்துக்கொன்றிருந்த நிலையில் சடலம் கண்டெடுக்கப்பட்டு 

கரைக்கு கொண்டுவரப்பட்டதாக மீனவர்கள் தெரிவித்தனர். சடலமாக மீட்கப்பட்டவர் புல்மேட்டை 2ம் வட்டாரத்தைச்சேர்ந்த 12 வயது மாணவன் மக்கீன் முனாஸ் 

என புல்மோட்டைப் பொலிஸார் தெரிவித்தனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு