கடலில் அடித்து செல்லப்பட்ட 5 மாணவா்கள், 4 போ் உயிருடன் மீட்பு, ஒருவரை காணவில்லை..! திருகோணமலையில் சம்பவம்..

ஆசிரியர் - Editor I
கடலில் அடித்து செல்லப்பட்ட 5 மாணவா்கள், 4 போ் உயிருடன் மீட்பு, ஒருவரை காணவில்லை..! திருகோணமலையில் சம்பவம்..

திருகோணமலை- பொன்மலைகுடா பகுதியில் கடலில் குளிக்க சென்ற 5 மாணவா்களில் ஒருவா் கடலில் காணாம ல் போயுள்ளதாக பொலிஸாாிடம் முறையிடப்பட்டுள்ளது. 

இவ்வாறு காணாமல் போயுள்ள மாணவன் புல்மோட்டை மத்திய கல்லூரியில் கல்வி கற்று வரும் புல்மோட்டை 2ம் வட்டாரத்தைச் சேர்ந்தவர் என எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்றய தினம் ஆசிரியர்கள் சுகயீன விடுமுறை காரணமாக பாடசாலைக்கு செல்லாத நிலையில் பாடசாலைக்குச் சென்ற மாணவர்கள் புல்மோட்டை பொன்மலைகுடா பகுதியுள்ள கடலில் 

குளிக்கச் சென்ற போது ஐந்து மாணவர்கள் கடலில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் நான்கு பேர் மீட்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் காணாமல் போன சிறுவனை தேடும் பணியில் முப்படையினர் மற்றும் பிரதேச மக்கள் ஈடுபட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு